search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டாசு ஆலையில் தீவிபத்து"

    சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    விருதுநகர்:

    சிவகாசி அருகே உள்ள இடையன் குளத்தில் குமரேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது.

    நேற்று இங்கு ஊழியர்கள் பணி முடிந்து அலுமினிய பவுடரை அப்படியே போட்டுவிட்டு சென்று விட்டனர்.

    இன்று காலை 6 மணியளவில் அலுமினிய பவுடர் தீப்பிடித்துக் கொண்டது. இதில் அந்த அறை முழுவதும் சேதமடைந்தது.

    அதிகாலை நேரம் என்பதால் ஊழியர்கள் யாரும் பணிக்கு வரவில்லை. இதனால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

    பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து இது குறித்து மாரனேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    ×